ஏடிஎம் அறைக்குள் ஏன் குளிர் சாதன பெட்டிகள் (ஏ.சி) அமைக்கப்படுகின்றன? | Objective GK

ஏடிஎம் அறைக்குள் ஏன் குளிர் சாதன பெட்டிகள் (ஏ.சி) அமைக்கப்படுகின்றன?

ஏடிஎம் அறைக்குள் ஏன் குளிரூட்டி (ஏ.சி) அமைக்கப்படுகின்றன?

ATM இயந்திரங்கள் நாள்தோறும் 24 x 7 இயங்குபவை. அப்படி நாள் முழுவதும் இயங்குவதால் அதிலிருந்து வெளிப்படும் வெப்பத்தால் இயந்திரம் பழுதாகவோ அல்லது மிகுதியான‌ அழுத்தத்தினால் வெடித்துச் சிதறவோ வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய‌ அழுத்தத்தை குறைக்கத் தான் ஏடிஎம் மையங்களில் ஏசியையும் நிறுவுகின்றனர்.

ஏடிஎம் மையம் மட்டுமல்லாது கல்வி நிலையங்களில் உள்ள பயிற்சி கணினிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களிலும், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற கணினி அதிகமாக‌ பயன்படுத்தப்படும் இடங்களில் இத்தகைய‌ காரணங்களுக்காக‌
குளிரூட்டிகள் (ஏ.சி) பயன்படுத்தப்படுகின்றன‌.